வித்திட்டவளே மறந்திட்ட நிலையில்
திடீரென துளிர்த்து நிற்கும்
பட்டுப் போன தென்னங்கன்று
மருத்துவரும் கை விரித்த போதும்
தலை திரும்பி வெளி வந்த கன்றை
எப்படியும் பிரசுவித்து விட வேண்டுமென
வலு திரட்டிப் போராடும் எருமை
பெற்றெடுத்த பிள்ளைகள் கை விட்ட போது
சுயத்தை மட்டுமே நம்பியபடி
முதுகுக்கூன் மேல் கூடை வைத்து
கீரை விற்கும் பாவாயி பாட்டி
விளிம்புநிலை வாழ்வை சுமந்தபடி
அன்றாடத் தேவைக்காய் அன்றாடம் உழைத்துக் கொண்டே
பிறரின் உரிமைக்காய் குரல் கொடுக்கும்
சேரித் தெரு மாறி அக்கா
இப்படியாய் இன்னும் சிலர்
புதியதாய் பிறக்க வைத்து இருகிறார்கள்
முடிந்தே விட்டது வாழ்க்கை என நான்
மூச்சடைத்து நின்ற தருணங்களில் எல்லாம்!!!
நன்றி நண்பர் சுரேஷ் அவர்களே ..
பதிலளிநீக்கு